“சோ”பா சக்தி….

போப் ஆக நினைப்பவன் புரட்சி செய்ய மாட்டான்
புரட்சி செய்ய நினைப்பவன் போப் ஆக மாட்டான்

நண்பன் மகேஷ் பரிசாகக் கொடுத்திருந்த அந்த நூலை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்தேன். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தட்டாத சுவாரசியமான நடையும் விறுவிறுப்பான ஓட்டமும், வரிகளுக்கும் ஊடாக ஓடுகிற மானுட நேயமும் அனிதா பிரதாப்புக்கே சொந்தமானவை. அப்படி அநேகமுறை படித்த புத்தகம்தான் ‘Island of Blood’.

தனது மகன் சுபின் பிறப்பிலிருந்து தொடங்கும் நூல் மெள்ள வளர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணித்து ஈழத்தின் கானகங்களில் விரிவடைகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அவரது ஈழம் நோக்கிய பயணமும் அதில் அவர் சந்தித்த அபாயகரமான சிக்கல்களும், பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புகளும் நம்மை ஆச்சர்யங்களின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

ஈழத்தில் “அமைதி”ப்படையின் வருகைக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த அவரது பயணங்கள், போராளிகளது பண்பும் கண்ணியமும் மிக்க நடவடிக்கைகள் என அவர் விவரித்துக் கொண்டே போகும்போது நாமும் அவருடனேயே பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. தமிழே தகிடுதத்தமான என்னைப் போன்ற ஜென்மங்களுக்குக்கூட எளிதில் புரியக்கூடிய ஆங்கில நடை. அவரது ஆப்கானிஸ்தான் பயணமும்…… பதற்றம் பற்றிக் கொண்ட நாட்களில் பாபர் மசூதியைச் சுற்றிய செய்திகளும்…… அவரது சுறுசுறுப்பைக் கண்டு வியக்க வைக்கிறது.

பொதுவாக ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் பாவங்கள் எல்லாம் செய்து முடித்த பிறகுதான் புண்ணியத்தலங்களை நோக்கிப் பயணப்படுவார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்கள் எதிலும் தலைகீழ்தானே. அப்படித்தான் ‘கொரில்லா’ விஷயத்திலும் நடந்தது. அனிதாபிரதாபுடைய நூலைப் படித்த பிறகுதான் ஷோபா சக்தியுடையதைப் படிக்க நேர்ந்தது. இலக்கிய இதழ்களில் இருந்து வணிக இதழ்கள் வரைக்கும் அதற்குக் கொடுத்த சிலாகிப்புகள் என்ன……? விமர்சன விழாக்கள் என்ன……? போதாக்குறைக்கு எந்தப் புண்ணியவானோ நம்ம ரஜினி ‘சாரு’க்கு வேறு அதைப் பரிசாகக் கொடுத்த செய்தியையும் படிக்க நேரிட்டது. (காவிரி நீர்ப்பங்கீடு குறித்து அவர் விடுத்த ‘தெளிவான’ அறிக்கைக்கும் இந்த நூல் வாசிப்பிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது என நம்புவோமாக…)

26.12.1967ல் பிறக்கும் கதையின் நாயகன் ரொக்கிராஜ் என்கிற யாகோப்பு அந்தோணிதாசன் ஆற அமர யோசித்து வீட்டில் உட்கார்ந்து விருந்துண்டுவிட்டு வெற்றிலைப்பாக்குப் போட்ட பிறகு பதினெட்டாவது வயதில் இயக்கத்தில் சேருகிறார். போகும்போது போதாக்குறைக்கு “எங்களுக்குக் கெதியான தமிழீழம் கிடைக்க அந்தோணியாரே உதவி செய்யும்” என அந்தோணியாருக்கு ஒரு அப்ளிகேசன் போட்டுவிட்டுப் போகிறார்.

உலகையே குலுக்கிய äலைப் படுகொலை ரொக்கிராஜை உலுக்குவதில்லை. வயது வந்தோர் வாக்குரிமைப்படி ஆயுதப் போராட்டத்தில் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் ரொக்கிராஜுக்குப் போன இடத்திலும் கேட்டது கிடைப்பதில்லை. இயக்கப் பெயராக இவர் ஒன்றுக்கு ஆசைப்பட வேறு பெயர் வைக்கப்படுகிறது. இயக்கப் பணிகளுக்காக ஷோபசக்தி… மன்னிக்க… ரொக்கிராஜ் வெவ்வேறு ஊர்களை யோசிக்க… இயக்கம் அவரது சொந்த ஊரான குஞ்சன்வயலுக்கே அவரை அனுப்பி வைக்கிறது. ரொக்கிராஜ், சஞ்சய் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற பிறகு பாதுகாப்புப் பணிக்காகக் குஞ்சன்வயல் அனுப்பப்பட… சஞ்சயின் அப்பா அநேக சிரமங்களைக் கொடுக்கிறார். குமுதினி என்கிற படகில் பயணப்படும் அப்பாவி மக்கள் ஐம்பது பேரைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடுகிறது சிங்களப் கடற்படை. இயக்கம் பதிலடி தர கடற்படைக்குப் பலத்த சேதம்.

guerilla1.jpg

‘எத்தினி நேவி முடிஞ்சிருப்பாங்கள் என ரொக்கிராஜ் (எ) சஞ்சய் கேட்க… ‘கிட்டத் தட்ட கணக்குச் சரியா வந்திருக்கும்’  எனக் ‘குரூரமாக’ச் சொல்கிறார் பொறுப்பாளர் ஒஷீலா. கணக்குக் கேட்டவரே இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை எனக் கதைக்கிறார். ஒரு பொழுதில் கடற்கரையில் மணல் அள்ளும் டிராக்டரை மக்கள் மடக்கிப் பிடிக்க அந்தப் பகுதிப்பொறுப்பில் இருந்த ரொக்கிராஜும் மற்றொருவரும் மணல் திருடர்களோடு மோத… இயக்கத் தலைமைக்கும் மணல் திருடர்களுக்குமே தொடர்பு இருப்பதாகத் தெரிய வர… அதுவும் அத்திருடர்கள் “இயக்கத்துக்கு லட்ச லட்சமாகக் குடுக்கிற ஆக்கள்”  என்பது தெரியாமல் கைவைத்து விட்ட ரொக்கிராஜுக்குப் பிடிக்கிறது ‘சனி’. பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறார்கள். இதற்கிடையில் புதைத்து வைத்த சிலிண்டர் ஒன்றை ரொக்கிராஜின் அப்பனே லவட்டிக் கொண்டு போக திருட்டுப் பழி வேறு.

‘மீசைகூட சரிவர அரும்பாத பொடியன்களும்’……,
‘பால்குடிகளும்’……,
‘புதுப்பொடியளும்’…… இந்த விருமாண்டி மீசை வைத்த ரொக்கிராஜைப் பாடாய்படுத்துகிறார்கள். ஒருவழியாக விடுவிக்கப்படும் ரொக்கிராஜ் சிறீலங்கா ராணுவம், …… ‘அமைதிப்படை’…… எனப் பலராலும் பந்தாடப்பட்டு பிரான்சுக்குப் பறக்கிறார். அங்கு வதியிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திலிருந்து தொடங்குவதுதான் மேலே சொன்ன விடயங்கள். தான் பட்ட இத்தனை துயரங்களையும்…… இயக்கத்தின் உள்ளே உள்ள சனநாயகம் அற்ற தன்மைகளையும்…… மணல் திருடர்களோடு கைகோர்த்து வலம் வரும் பொறுப்பாளர்களும்…… பற்றி விரிவாகக் கடிதம் ஒன்று எழுதி………
‘மணிக்கணக்கா, நாள் கணக்கா, இப்ப வருசக்கணக்கா தன்ர சேர்ட் பொக்கற்றுக்குள்ள ஒரு கடிதம் கொண்டு திரியிறான். முதலில் தெரிஞ்ச அறிஞ்ச ஆக்களுக்கு மட்டும்தான் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி வைச்சிருக்கிறதாய்ச் சொல்லிக்கொண்டு திரிஞ்சவன், இப்பப் பார்க்கிற ஆக்கள் எல்லோருக்கும் அதைச் சொல்லித் திரியறான்’  இப்படி தன் ‘தலைவருக்கு’ (?) கடிதம் எழுதி சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் ரொக்கிராஜ் தன் தலைவரின் அஞ்சல் முகவரியோ, ஈமெயில் முகவரியோ எதுவும் கிடைக்காமல் தேடிச் சலித்து, பரிதவித்துப் போய் வேறு ஏதும் வழி கிடைக்காமல் பிரான்சிலிருந்து பறந்து வந்து தமிழகத்தில் இறங்கி புத்தாநத்தத்தில் உள்ள கருப்âர் சாலைக்குப் போய் ‘அடையாளம்’ சாதிக்கின் கதவைத் தட்ட அவர், “இந்தக் கடுதாசி பாணியெல்லாம் வேண்டாம் புத்தகமாகவே போட்டுரலாம். அப்பத்தான் தலைவர் பார்வைக்குப்போகும்”  என சொன்னதன் விளைவே இந்த ‘கொரில்லா’.

ஈழத்து ‘கொரில்லா’ குறித்து தமிழகத்துக் ‘கழுதையின்’ சில சந்தேகங்கள்:

1. ‘பிணத்தில் கூட கணக்குப் பார்க்கிறவர்கள்’……,
‘மணல் திருடர்களோடு தொடர்புள்ளவர்கள்’……,
‘உட்கட்சி சனநாயகத்திற்கே அர்த்தம் தெரியாதவர்கள்’…… என ஷோபாசக்தி சரமாரியாகப் ‘புகழ்ந்து’ தள்ளும் அந்த இயக்கமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ நெத்தியடியாய் பதில் சொல்லும் சனநாயகச் சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா?

2. இயக்கம் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சரியான திசையில்தான் செல்கிறது என்று பதில் அளித்தால் அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்ட சிறையில் ‘வதியிடம்’  கோரி விண்ணப்பிக்க வேண்டி வரும்?

3. இந்த நூலை வரைவேற்றவர்கள், அச்சிட்டவர்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரு சில வணிகப் பத்திரிக்கை ஆகியோரில் ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு ஈழப் போராட்டத்தில் எத்தனை பங்களிப்பு இருக்கிறது?

4. நூற்றுக்கு நூறு சதவீதம் அக்மார்க் முத்திரையோடு சிறுபிழை கூட இன்றி ‘தேசிய இன விடுதலைப் போராட்டம்’ உலகில் எந்த மூலையில் சாத்தியப்பட்டிருக்கிறது?

5. ரொக்கிராஜின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்கிற அதேவேளையில் அவர் விமர்சிக்கும் இயக்கத்தைச் சரியானதுதான் எனச் சொல்பவரது மனித உரிமைக்கு யார் பொறுப்பு?

6. சிறீலங்கா அரசும்…… ‘சோ’க்களும்…… இந்த நூலை எந்தவிதத்தில் எதிர் கொள்வார்கள்?

7. 1970களிலேயே மலையகத்தின் சிவனு லட்சுமணன் தொடங்கி இன்றைய கணம் வரை முப்படைத் தாக்குதல்களிலும் இன்ன பிற ஆக்கிரமிப்புகளிலும் தங்கள் இன்னுயிரை மண்ணுக்கு உரமாக்கி விட்டுப் போன பல்லாயிரக்கணக்கான போராளிகளிலும் மக்களிலும் எத்தனைப் பேருக்கு இப்படி தமது வலிகளைப் புத்தகமாக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது?

இப்படிப் பல பாழாய்ப்போன கேள்விகள் மண்டைக்குள் குடைந்தபடி இருந்தாலும் ரொக்கிராஜின் தடுமாற்றங்களை மீண்டும் ஒரு முறை அசை போட்டுப் பார்க்கிறேன்.

சங்கிலியன் என்று பெயர் வைப்பதா…?
அல்லது அராபத் என்று பெயர் வைப்பதா…?
அல்லது நேதாஜி என்று பெயர் வைப்பதா…?

Pலொட் இயக்கத்தின் ‘வங்கம் தந்த பாடம்’ படித்த பிறகு ‘முஜிபுர்’ என்று பெயர் வைப்பதா…?
தனிநாயகம் என்று பெயர் வைப்பதா…?

என இயக்கத்தில் நுழையும்போதும் – நுழைந்த பின்னரும் அவருக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

சரி… எல்லாம் கிடக்கட்டும்.

ஆனால்…
தப்பித்தவறி அவர் தமிழகத்தின் அரசியலில் நுழைந்திருந்தால் என்ன பெயர் வைத்திருப்பார் என யோசித்துப் பார்த்தேன்…

வாழப்பாடி ராமமூர்த்தி…?

நன்றி : புதிய பார்வை (1.9.2004)

6 Comments

  1. சோபா சக்திக்குள் ஒளிந்திருக்கும் `சோ’! பிரமாதம்! இது `சரியான போட்டி!’.

  2. Rajini ‘Charu’ — pretty hillarious

  3. appadi poodu arivaalaii ………thalaivar shobha sakthi puthithaka kodi pidikka thodanki irukkum thaalithiyam maraintha sivaram sonnathu pol ” ekathipathiya naadukalin kalakam adakkum( counter insurgencykku ennal mudintha thamiz) padimuraikalil mukiyamaanathakum. thalaivarukku orae kallil oru maramae vizhum……entha ekathipathiyathikku ethirakka kodipidikkiraroe athae ekathipathiyathikku ARINTHUM ariyamalum ethayoee kaluvuraaruu…. valka nee emman

  4. எதுக்குத்தான் இந்த பேரினவாதத்தின் பிட்டம் காக்கும் ‘அடிவருடிகளை’ பெரியவனாக்கி ஒரு பதிவையே வீணடிச்சிட்டீங்க. மார்க்சிசம், பெரியாரிசம் வாய்கிழிய பேசும் ‘இவர்’ போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு மயிரளவும் செயலாற்றாதவர்கள்.

    -மறவன்

  5. I came to know about your blog thru thooral.com’s featured blog.Your writings are too good and

  6. respected paamaran,situation in tamilnadu regarding tamileazham is not easilyunderstood by commom people….try to enhanse the spirituality by doing ur work in familiar magazine like ‘vikatan; kumudam’


Comments RSS TrackBack Identifier URI

Leave a comment