‘ஜீன்ஸ் சேவக்’குகள்…

‘தாஜ்மகாலைக் கட்டியது ஷாஜகான் அல்ல…’ என எனக்கொரு ஈ-மெயில் வந்திருந்தது.
இந்த ரீதியிலேயே போனால்…
அமெரிக்க ராக்கெட் விண்ணில் வெடித்தது திப்பு சல்தான் செய்த சதி…
டயானா சாவுக்கு பிடல் காஸ்ட்ரோதான் காரணம்…
என்றெல்லாம் கூட மின்னஞ்சல்கள் வரலாம்.
இத்தகைய மின்னஞ்சல்கள் மொட்டைக் கடிதாசிகளின் நவீன வடிவம்.
பெரும்பாலான மின்னஞ்சல்களில் கொடி கட்டிப் பறப்பது… ‘தேசம்’ குறித்த அதீத அக்கறைகள்தான். அமெரிக்காவில் வயிறு வளர்த்தாலும் இவர்களது ‘தேசம்’ குறித்த ‘அக்கறைகள்’ சொல்லி மாளாதவை.
காஷ்மீர்…
கோத்ரா…
லைன் ஆப் கண்ட்ரோல்… என வெளுத்து வாங்கி விடுவார்கள் இந்த ‘நியோ பேட்றியாட்ஸ்’கள். [...]

ஈழத்து இளைஞர்களும்……..தமிழகத்துத் தாத்தாக்களும்….

 
1983 ல் நடந்த யூலைப் படுகொலைகள் உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. கல்லூரி மாணவர் தலைவன் நான் அப்போது. அப்பா ஊட்டிய அடிப்படை தமிழ் உணர்வு…….. தமிழ் சினிமா புகட்டிய தறுதலைத்தனம்…….. கொஞ்சம் சமூக அக்கறை…….. என எல்லாம் கலந்த கலவையாக இருந்தேன்.
உளறல் நாயகனின்……..ச்சே…….. “உலக நாயகனின்” வார்த்தைகளில் சொல்வதானால் : கடவுள் பாதி. மிருகம் பாதி.
முதன் முதலில் சந்தித்த ஒரு ஈழத்துச் சகோதரனிடம் நான் கேட்ட “அறிவுபூர்வமான” கேள்வியே “சார் [...]