சர்வகட்சிப் பிரமுகர்கள், இடதுசாரிகள், தமிழ்த்தேசியவாதிகள், திரையுலகினர் என அத்திருமண மண்டபமே களைகட்டியிருந்தது. இப்படி சகல முகாம்களில் இருப்பவர்களும் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வு எப்போதாவதுதான் வாய்க்கிறது. இந்தமுறை அதற்கான வாய்ப்பை வழங்கியவர் தோழர்.மணிவண்ணன். அவரது மகள் ஜோதி திருமணத்தில்தான் இப்படி சகலரும் கூடி அசத்திக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஏறக்குறைய இரண்டுமணி நேரம் பல்வேறு இயக்கப் பிரமுகர்களும், திரையுலகினரும் மணமக்களை வாழ்த்திப் பேச….. அனைவரது பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள். மேடையில் பெண்விடுதலை…… பெரியார் சிந்தனைகள்…… என ஆளாளுக்கு அசத்திக் கொண்டிருந்தார்கள். நண்பர் சத்யராஜ் மேடைக்கு அழைத்தார். நாம் போய் சொதப்புவதை விட அந்தப் பத்து நிமிடத்தை மற்றவர்கள் எடுத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்குமே என்கிற யோசனையில்……. அவருக்கும், மணிவண்ணனுக்கும் ஒரு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு கீழேயே இருந்துவிட்டேன்.
அனைவரது பேச்சையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியாகப் பேச வந்த ரஜினி இன்றைக்கும் கூட பலருக்கும் தெரியாத ஒரு வரலாற்று உண்மையை சத்தமில்லாமல் போட்டு உடைத்ததைக் கண்டு ஆடிப் போனேன் நான் . பெரியாரிடம் இருந்து பிய்த்துக் கொண்டுபோய் தி.மு.க வை ஆரம்பித்ததற்கான உண்மையான காரணங்கள் என்னென்ன? இந்திய சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த முரண்பாடுகள்….. என்பவற்றையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அலசும் புத்தகங்களை தனக்கு மணிவண்ணன்தான் படிக்கக் கொடுத்ததாக மனம்விட்டுப் பேசினார் ரஜினி. என்னைப் போன்றவர்களுக்கு ரஜினியுடன் எண்ணற்ற விசயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அன்றைக்கு அவர் பேசிய பேச்சு மனதுக்கு ஆறுதலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.
”கல்யாணம்தான் பிரச்சனை” என்று வெளியில் புரளி கிளப்பினாலும் இன்றைக்கும் நாறிக் கொண்டிருக்கும் சுதத்திரத்தை ஏற்றுக் கொள்வதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த அடிப்படை முரண்பாடுகள் என்ன? ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதில் தொடங்கி….. ஓட்டு அரசியலுக்காக அடித்த பல்வேறு பல்டிகள் வரைக்கும் அநேக விசயங்களில் பெரியாரிடம் இருந்து அண்ணா எப்படி அடிப்படையிலேயே மாறுபட்டார் என்பது தி.மு.க.வின் நதிமூலத்தை அறிந்தவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.
மேடையில் பேசிய ரஜினி குறிப்பிட மறந்த அந்த புத்தகத்தின் பெயர் : ”ஆகஸ்ட் 15 – இன்பநாள் – துக்க நாள்” என்பதுதான். என்னை மலைக்க வைத்த எண்ணற்ற நூல்களில் அதுவும் ஒன்று.
எது எப்படியோ வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வரலாற்று உண்மையை பலருக்கும் கொண்டுபோகும் வகையில் பேசிய ரஜினியை கஞ்சத்தனம் இல்லாமல் பாராட்டித்தான் தீர வேண்டும்.
**********
(ஒரு முன்குறிப்பு: கீழுள்ள பகுதியினை அப்படியே இங்கிலீஷில் மொழிபெயர்த்து நந்திதாதாஸ், அருந்ததிராய் உட்பட பிற கலைஞர்களது பார்வைக்கும் அனுப்பி வைத்தால் நமது கூட்டு முயற்சிக்கு ஒருவேளை பயன்கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது எனது நம்பிக்கை. அப்படி அனுப்புகின்ற நல்ல உள்ளங்கள் அதன் ஒரு பிரதியினை எனக்கும் அனுப்பி வைப்பின் மிக நிறைவு கொள்வேன்.)
சச்சின் டெண்டுல்கர் ஏலத்திற்கு விட்டிருக்கிறார் தன்னையே. அதுவும் செப்டெம்பர் 27 தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலும் ஒரு வாரத்திற்கு. கொஞ்சம் பொறுங்கள்….. அவசரப்பட்டு முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம் யாரும்.
அதாகப்பட்டது…… சச்சின் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில்…… இவர் தன்னையே ஏலம் அறிவித்திருக்கிறார். அந்த ஏலத்தில் யார் அதிக விலைக்கு தன்னை ஏலம் எடுக்கிறார்களோ…… அவருடனேயே ஒருவாரம் தங்கியிருந்து கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து காய்கறி நறுக்குவது வரைக்கும் சகலத்தையும் கற்றுத் தரப் போகிறார். அப்படி ஏலமாகக் கிடைக்கும் பனத்தை வைத்து
ஏழை எளியவர்களுக்கு உதவப்போகிறாராம் அவர். “பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் பேரானந்ததிற்கான வாரம்” (JOY OF GIVING WEEK) என அறிவித்திருக்கிறார். இந்த அற்புதமான ஆலோசனையை அவருக்கு வழங்கியவர் சச்சினின் பத்து வயது மகள் சாரா.
பிறருக்கு ஈதலில் இருக்கும் பேரானந்தம் புரிகிறது நமக்கு. ஆனால் அதற்கு முன்னதாக அவர் செய்யத் துணிந்திருக்கும் செயல்தான் நம்மை பெரும் துயரில் தள்ளியிருக்கிறது.
நாடே சுடுகாடாக…..
மனித உயிர்களை பிய்த்துக் குதறி நாய்கள்கூட கவ்விக் கொண்டு ஓடும் புதைமேடாக……
தமிழர்கள் மரண ஓலத்தில் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இலங்கையோடு கிரிக்கெட் விளையாடப் போயிருக்கும் செயல்தான் அது.
மனித குலத்தின் மீது அக்கறை கொண்ட எவரும் இச்செயலை செய்யத் துணிய மாட்டார்கள். அதுவும் பிறருக்கு கருணையை அள்ளிக்கொடுப்பதில் பேரானந்தத்தை அடையத் துடிக்கும் சச்சின் போன்றவர்கள் எந்த முகத்தோடு இலங்கையில் கால் வைக்கத் துணிகிறார்கள் என்பதுதான் நமக்குள் எழும் கேள்வியே.
விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பாருங்கள். அதை அரசியல் ஆக்காதீர்கள் என்று முணுமுணுப்பவர்கள் ஒருமுறை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் போதும் பல உண்மைகள் புரிபடும். அதுவும் இன்னொரு விளையாட்டு வீரரிடம் இருந்தே ஒலித்த அந்த மனிதநேயம் மிக்க குரலை இன்னொரு முறை கேட்டுவிடுவது எல்லோருக்கும் நல்லது. அதுதான் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜின் குரல். அதுவும் ஐ.நா.சபையிலேயே ஓங்கி ஒலித்த குரல் இதுதான்:
“ ‘விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார். அரசியலை அதனுடன் கலக்காதே’ என்கிற வியாக்கியானம் எல்லா சமயங்களிலுமே சாத்தியமில்லை. அதில் பல சமயங்களில் நாம் எதிர்க்க வேண்டியோ அல்லது ஆதரிக்க வேண்டியோ வரலாம். ஏனெனில் நாம் முதலில் மனிதர்கள். அதன்பின்புதான் நாம் விளையாட்டு வீரர்கள். தென் ஆப்பிரிக்கா என்னைப் பலமுறை விளையாட
அழைத்தும் நான் மறுத்ததிற்கான காரணம் அதனது நிறவெறிக் கொள்கைதான். நாம் மனிதர்கள் என்பதால் நம் ஒவ்வொருவருக்கும் ஆற்றியாக வேண்டிய மகத்தான கடமை இருக்கிறது. இப்பூவுலகம் அனைவருக்கும் பொதுவானது என்கிற சமூக அக்கறை அனைவருக்குள்ளும் இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.”
என்று எளிய மனிதர்கள் சார்பாக 1988 இல் குரல் கொடுத்தார் விஜய் அமிர்தராஜ்.
நிறவெறி ஆப்பிரிக்காவோடு விளையாடக் கூடாது என்கிற நியாயம்……
சிங்கள இனவெறி தலைவிரித்தாடும் இலங்கைக்குப் பொருந்தாதா?
ஏறக்குறைய 2270 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மக்களை கொன்றுகுவித்து….. எண்ணற்றவர்களை ஊனமாக்கி கலிங்கபோர்க் களத்தில் வெற்றி இறுமாப்போடு நின்ற அசோகச் சக்ரவ
ர்த்தியிடம்…….
“எண்ணற்றவர்கள் உன் வாளில் வீழ்ந்தார்கள் சரி. ஆனால் இறுதியில் நீ அடைந்திருப்பது என்ன?” என்கிற கேள்வியை எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த புத்த பிக்குகள் எழுப்பினார்கள் கொல்லாமையைப் போதித்து பிறருக்கு கருணையை அள்ளி வழங்குவதன் தத்துவத்தை உணர்த்தினார்கள் அன்று..
மனித உயிர்களின் மகத்துவத்தை உணராமல் நர வேட்டையாடி வரும் நவீன மன்னன் ராஜபக்சேவிடம் ”இதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?” என்ற கேள்வியை யார் கேட்பது என்பதுதான் நமது கேள்வி.
அலறித் துடிக்கும் மானுடத்தின் இக்கேள்வியை ஆஸ்கார் விருதை வென்றும் ஈழத் துயரால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த தம்பி ஏ.ஆர்.ரகுமான் கேட்கலாம்……
குஜராத் படுகொலைகளை தனது “பரூக்” படத்தின் மூலமாகப் பதிவு செய்த தோழி நந்திதாதாஸ் கேட்கலாம்…..
உலகில் அவலங்கள் நேரும் போதெல்லாம் தன் சுட்டு விரலை நீட்டிக் குரல் கொடுக்கிற அ
ருந்ததிராய் கேட்கலாம்…….
இவர்களைப் போன்ற மனித நேயம்மிக்க கலைஞர்கள் எவரும் கேட்கலாம்……
அதுவும் அசோகனுக்கு போதித்த அந்த மகத்தான புத்த துறவிகள் விட்டுச் சென்ற இடத்தில் நின்று.
முதலில் மரணத்தின் விளையாட்டுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி.
பிற்பாடு ஆடலாம் மனிதர்களது எந்த விளையாட்டையும்.
நன்றி : தமிழக அரசியல்
7 Comments
Comments RSS TrackBack Identifier URI
Leave a comment

ஒரு அருமையான புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி தோழர்!
பாமரன் அண்ணா,
ஒரு தமிழன் இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட (மன்னிக்கவும்) துடு சேர்க்க சென்றதை பற்றி ஒன்றுமே எழுதவில்லை.
பின் குறிப்பு: அந்த மக்கா பெயர் தினேஷ் கார்த்திக்.
சச்சின் டெண்டுல்கர் ஆவது வேற்று கிரகவாசி (மும்பையை சேர்ந்தவர்)
ஆனால் இந்த வெண்ணை (தினேஷ் கார்த்திக்) சென்னை அல்லவா.
பிரசாத்.வெ
அய்யா எழுத்தாளரே , august 15 இன்ப நாள் துக்க நாள் நூலை எழுதியது யார் ? எங்கு கிடைக்கும் ?
I like to bring to everyone’s notice that Sschin dedicated his man of the match award at the end of the CHENNAI TEST (India-England) to 26/11 Mumbai Taj Hotel Victims and had a long sermon on the topic. What prevented him repeating that type of gesture towards the SUFFERING TAMILS after winning the man of the match award this time during the final ODI ?
Why is he selective?
You are a useless highly negative oriented man dont know anything other than srilankan tamil. mr pamaran instead of shouting you can go to eezham and fight for those peoples.
have you ever in your life wrote about any possitve stuff and attitude ?
always negative attitude and opparies..
blahbal@yahoo.com
Dear Suresh,
Vow…Great attitude yar…
You people can say just like tha if anyone raise their voice against Srilanka “If you want you go and fight for those peoples” … what a wonderful attitude….
So at the time of “Kargi war” and “Mumbai attack” you went there to save people with out saying/commenting anything….If so I admire you a lot….but at the same time if you were just throwing your words with out any action….obviously it’s not fair for you to talk about “positive stuff and attitude!!!”