ஆசுபத்திரில இருந்து வந்ததுல இருந்தே பலமாசமா மனசு செரியில்ல. ஈழத்துல நம்ம சனங்கள அந்த நாசமாப் போறவனுக கொத்துக் கொத்தா குண்டப் போட்டுக் கொல்றாங்கன்னு வர்ற சேதிகளக் கேட்டா சோறு கூட உள்ள எறங்க மாட்டேங்குது. யாரு கூட எதப் பத்திப் பேசிகிட்டு இருந்தாலும் நெனப்பு அங்க கொண்டு போயி உட்டுருது.
இதுக்கெடையில எவனாவது அந்தப் படம் பாத்தியா? இந்தப் படம் பாத்தியா?ன்னு கேட்டா…… கால்ல இருக்குறத கழட்டி அடிக்கலாமான்னு கோபம் கோபமா வருது.
அவ்வளவு ஏன்….. எனக்கு உங்க [...]
November 11, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 18 Comments
நெசமாவே தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை என் வாழ்நாளுல பார்த்ததேயில்லீங்க….
அதுவும் ராமசாமி, பூவராகவன், நாயுடு, சிங்கு, புஸ்சு, அப்பறம் ….. அதென்ன புளிச்சரோ…….பிளிச்சரோ…… ன்னு நீங்க பத்து வேசத்துல கலக்குன கலக்கு இருக்குதே அதப் பாக்க கண் கோடி போதாதுங்க.
அதுவும் ஆராய்ச்சி பண்ணுற எடத்துல அநியாயத்துக்குச் சாகிற அந்தக் கொரங்கப் பாத்து கூட நீங்க படுற பாடு இருக்கே….. அடடா அதப் பாத்ததும் கண்ணுல தளுக்குன்னு தண்ணீ வந்துடுச்சுங்க. நீங்க வெறும் அந்தக் கதாபாத்திரம் மட்டுமில்ல……. நீங்க [...]
November 5, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 15 Comments
கண்மணி….. வம்போட…. பாமரன்
நான்…. நான்…. எழுதும் கடிதம்…..
இல்ல லெட்டர்ன்னு வெச்சுக்கலாமா……
வேணாம் கடுதாசியே இருக்கட்டும்…..
ஊடால…… ஊடால….. ஆஸ்கர்…… ஐ.நா…….. சாக்ரடீஸ்…..
நீட்ஷே…… கிரகாம்பெல்…. சீமைக்கருவ….. அய்யனாரு…… எல்லாம் சேர்த்திக்குங்க…….
அய்யோ……. உண்மையச் சொல்லீர்றன் சாமீ…….. உங்கள மாதிரி எல்லாம் யோசிக்க நம்மால செத்தாலும் முடியாது. ஆனா….. சின்ன வயசுல இருந்தே உங்க படம் பார்த்துப் பாத்து வளந்த ஒடம்புங்க இது.
நீங்க சிகரெட் புடிச்சுகிட்டே சுமித்ராவோட திமிர அடக்குற ஸ்டைலுக்காக ”நெழல் நெசமாகிறது” படத்த பதினேழு தடவை பாத்திருக்கேன்…..
சொல்லாம கட் அடிச்சுட்டு மன்மதலீலை [...]
October 29, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 14 Comments
இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும்
அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல்.
இதனை எழுதும்போது கூட….
சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான்
ஆரம்பிக்கிறேன் இதனை.
நினைவு தெரிந்த நாளிலிருந்து….
‘…திரை இசை இத்தோடு முடிந்தது.
மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு’
என்பதோடு என் வீட்டு வானொலியின்
கழுத்து திருகப்பட்டு விடும்.
ஹம்சத்வதனியோ..கல்யாணியோ..
கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ…
அணுவளவும் அறிந்ததில்லை நான்.
உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான்.
உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான்.
உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் விநியோகஸ்தனுமில்லை நான்.
எனவே… [...]
March 6, 2008
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 19 Comments
நேற்றைய பதிவின் தொடர்ச்சி
‘பம்பாய்’ உனக்கு விஷமா? உன்னையெல்லாம் விஷம் வெச்சுத்தான் காலி பண்ணனும்னு கோபத்துல அவன் சட்டையவே எகிறிப் புடுச்சிட்டேன்.
‘அய்யோ… என் சட்டைய உடு…
என் முதுகெலும்பு… முதுகெலும்பு’ன்னு கத்தறான்.
முதுகெலும்பப் பத்தி நீ பேசாத… இந்தக் கோடம்பாக்கத்துலயே எங்காளுக்கு மட்டும்தான் இருக்கு அது… மொதல்ல சொல்லு அதுல என்ன விஷம்ன்னு…?
“சரி… சொல்றேன்… சொல்றேன்…
இப்போ
குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான் – சுப்ரமணி சோடா குடுத்தான் அப்படீங்கிறத… திருப்பிப் போட்டு படி…
சுப்ரமணி சோடா குடுத்தான் – குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான்னுவரும். [...]
October 17, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 19 Comments
செளக்யம்களா…?
இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குதுங்க. எந்த மகராசரு எதுக்குப் பெட்டிசன் குடுப்பாங்களோன்னு ஒரே பயம்மா இருக்குதுங்க…
அப்புறம்… உங்க ‘தேசபக்தி வியாபாரமெல்லாம்’ நல்லபடியா நடக்குதுங்களா…? நம்முளுக்குப் பொழுதுபோக்கே படம் பாக்குறதுதாங்க. மொதல்ல எல்லாம் ‘ஜகன் மோகினி’, ‘அபூர்வ சக்தி 369’ மாதிரிப் படங்கன்னா எனக்குக் கரும்பு தின்ன மாதிரிங்க. ‘ஆட்டுக்கார அலமேலு’வ பதிமூணு தடவ பாத்தேன்னா புரிஞ்சுக்கங்களேன். நான் எந்தளவுக்கு சினிமாவெறியன்னு.
இப்புடி இருந்த என் வாழ்க்கைல…
திடீர்னு ஒருநாள்…
கீழ்வானத்துல ஒரு வால் நட்சத்திரம் தெரிஞ்சுதுங்க… வெளில [...]
October 15, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 10 Comments
உனது மடல் கிடைத்தது.
இம்முறையும் குழம்பிப் போனேன்.
எதைத்தான் எழுதுவது…?
‘நீ இங்கு சுகமே. நான் அங்கு நலமா?’ என்று எழுதிக் கொண்டிருந்தால் நிச்சயம் நீ என்னை மனநல மருத்துவமனையில்தான் சேர்ப்பாய் என்று தெரியும்.
இருப்பினும் குழப்புவது எனக்கு மட்டுமேயான பிறப்புரிமை என்று எண்ணிக் கொண்டிருந்தால்…
உனக்கும் அதுதான் என்பது போல உனது மடல் மேசையின் மீது கிடந்தது.
“எங்கள் பிரச்சனைகளைப் பற்றி யார் எப்போழுது எழுதினாலும் ஒன்று ‘வரதட்சணைக் கொடுமை அல்லது மாமியார் மருமகள் பிரச்சனை’ என்று எழுதுவதே பலரது வாடிக்கையாகிவிட்டது.
பெண்கள் என்றாலே செக்கு [...]
October 9, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 22 Comments
நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?
ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?
அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?
அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.
அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.
அந்த [...]
September 11, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 7 Comments
நம்ம ‘பாய்ஸ்’ படத்த எப்படியாவது பாத்தர்லாம்ன்னு பார்த்தா
அப்பப் பாத்து வேலைக்கு மேல வேல வந்துகிட்டே இருக்கு.
சரி எப்படி இருந்தாலும் நம்மாளுது இருநூறு நாளைக்கு முன்னாடியேவா எடுத்தறப் போறான்…னு அசால்ட்டா இருந்தா ரெண்டாவது நாளே…
‘பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு ஒரு விளம்பரம்
அப்புறம் அடுத்த நாளு…
‘மகளிரின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு இன்னொரு விளம்பரம்…
இதென்னடாது வம்பாயிருக்குன்னு யோசிக்க யோசிக்கவே…
‘டாக்டர்.கிருஷ்ணசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு மறுபடியும் ஒரு விளம்பரம்
கொஞ்சம் உட்டா நம்ம ஷ்ஷ்ஷ்ஷங்கரோடதையே வெட்டீருவாங்களோன்னு…
அடச்சே நம்ம ஷங்கருக்குப் புடிக்காதுன்னு [...]
June 27, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: Leave a Comment
கும்புட்டுக்கறனுங்கோ…
ஊட்ல எல்லாரும் செளக்கியம்களா…?
நமைச்சல் புடிச்ச நம்ம கைக்கு கொஞ்ச நாளா வேலையே இல்லாம இருந்துச்சுங்க…
ஆனா அரிசி தின்ன வாயும்…..
ஊர் மேயப் போன ….ம்
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க நம்ம ஊர்ல.
ஏதோ உங்கள மாதிரி நாலு ‘நல்ல’ மனுசனுக இருக்கறதுனாலதான்
நம்ம ‘பொழப்பு’ ஓடுதுங்க.
உங்களொட மொதல் படத்தப் பார்த்ததுல இருந்தே
எப்படியாவது உங்கள ‘பலமாப்’ பாராட்டணும்ன்னு
தவியாத் தவிச்சுக்கிட்டு இருந்தேனுங்க…
ஆனா இப்பத்தான் அதுக்கு வசமா வேல வந்திருக்கு.
சமீபத்துல உங்க சமாச்சாரம் ஒண்ணு
சினிமாவா வந்திருக்குதுன்னு கேள்விப்பட்டதும் தலகால் புரியல.
கந்தசாமி! போலாமாப்பா படத்துக்கு…?ன்னேன்.
“என்ன படத்துக்கு…?”ன்னான் கலாரசனையத்த கந்தசாமி.
“பாய்ஸ்…”ன்னேன்
“எனக்கு [...]
June 26, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 11 Comments