“பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….(கிளைமேக்ஸ்..)

”மாயா மப்படிச்சுட்டு வந்து
தகராறு செய்யறாரு”ன்னு ஒரு கோஷ்டி சொல்ல…

”அன்னைக்கு நான் பச்ச தண்ணிகூட குடிக்கல….
என் வாய மோந்து பாத்தவங்க
Sikபலபேரு இருக்காங்க சாட்சிக்கு”ன்னு
அந்தத் ‘தியாகி’ திருப்பிச் சொல்ல….

“அந்தாளு ஒரு மாமா”ன்னு இவுரு சொல்ல….
“நீ மாமாவுக்கே மாமா”ன்னு அவுரு சொல்ல…..
“சிவராமன் செத்ததுக்கு மலர் வளையம் வைக்க
விஜயகுமார் போகலை”ன்னு ராதாரவி சொல்ல….
“சிலுக்கு சுமிதா செத்ததுக்கு மலர் வளையம் வைக்க
ராதாரவி போகலை”ன்னு விஜயகுமார் சொல்ல…..

நாம செத்தா பொணத்தை பொதைக்கவாவது
உடுவாங்களாங்கிற பயத்துல
பானுப்பிரியாவும், நக்மாவும் பயந்து வெளிய ஓட….
Banupriya’ஒட்டுமொத்தமா இந்த சினிமா உலகத்துக்கே
ஒரு மலர் வளையம் வெச்சுட்டா என்ன?’ன்னு
சனங்க நெனைக்க வேண்டி வந்திருச்சு.

அந்த நேரத்துலதான் எக்குத்தப்பா
நம்ம கலாரசனையத்த கந்தசாமி கிட்ட சிக்கித் தொலைச்சேன்.
உங்க வண்டவாளங்க எல்லாம் தண்டவாளம் ஏறுன
செய்திகள அவனும் படிச்சுத் தொலைச்சிருக்கான்.

வந்ததும் வராததுமா…..
“உங்க ‘கலைஞருக’ அடிக்கிற லூட்டியப் பாத்தியா?”ன்னான்.

பாத்தேன்…ன்னேன்.

“என்னக் கேட்டா பேசாம…..
இந்த சினிமா எடுக்கறதையே
பத்து வருசத்துக்கு தடை பண்ணீரனும்……”ன்னான்.

அதெப்புடி கந்தசாமி….. நகச்சுத்து வந்துச்சுன்னா…..
விரலயே எடுத்துருவியா நீயி?…..ன்னேன்.
வந்துதே கோபம் அவனுக்கு.

“இது நகச்சுத்து இல்லய்யா….. புத்துநோயி….
இவுங்க சினிமாங்கற பேர்ல இந்த நாட்டையே
குட்டிசுவரா ஆக்கீட்டு இருக்காங்க.
நூத்துக்கு 98 படங்க நம்ம பண்பாட்டையே
பாழாக்குற படங்கதான்.
மீதி ரெண்டு சதவீதமும்
இவுங்களையும் மீறி தப்பித்தவறி வெளி வர்ற படங்க.

பாதிப்படத்துக்கு மேல……
தொப்புள்ல பம்பரம் உடறது…..
ஆஃப்பாயில் போடறது…..
கொத்துப் புரோட்டா போடறது…..ங்கிற கதையா
வர்ற படங்கதான்.

இவுங்க தானும் உருப்படாம
மக்களையும் உருப்படாமப் பண்றதுதான் சகிக்க முடியல.
இதுல இந்தப் பெரிய பெரிய நடிகருககிட்டயும்,
டைரக்டருக கிட்டயும் சிக்கீட்டு
இந்தத் துணை நடிகருகளும்,
உதவி இயக்குநர்களும் படறபாடு இருக்கே…..
அத எழுத்துல சொல்ல முடியாது.

இந்தத் தொழிலையே இழுத்து மூடுனா…..
Thoppulஅவுங்கபாடுதான் கொஞ்சம் கஷ்டம்.
ஆனா….
மொதல்ல கஷ்டமா இருந்தாலும்…..
அவுங்களும் மத்த சனங்க மாதிரி
உப்பு வண்டி இழுத்தோ….
தார் ரோடு போட்டோ….
செருப்புத் தெச்சோ பொழைக்கப் போலாம்.
அரைக்கஞ்சி குடிச்சாலும்
ஆரோக்கியமா போகும் பொழுது.
இந்த மகராசருக கிட்ட தவணை முறைல
துட்டு வாங்கிப் பொழைக்கறதவிட
மானத்தோட பொழைக்கலாம் தெரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தசாமி.

இப்ப என்னவோ டைரக்டர்களுக்கும்…..
அதென்னவோ மேளக்காரருக்கும் சண்டை….
அங்கியும் நாற்காலி பறந்துச்சுன்னு படிச்சனே…..
அது என்ன கந்தா….?ன்னேன்.

“யோவ்….. அது மேளக்காரரு இல்ல…. சம்மேளனக்காரரு…..

’நடிகரோட சம்பளத்தைக் கொறைக்கணும்’கறாங்க படத் தயாரிப்பாளருக…

‘உன்ன நம்பி வாங்குன பல படங்க டப்பாக்குள்ள பூந்துடுச்சு.
அதுனால நீ மொதல்ல பட வெலையக் கொறை……’ங்கறாங்க
விநியோகஸ்தருங்க…..

‘அதெல்லாம் இருக்கட்டும்…..
படம் தயாரிக்க கோடி கோடியா கொட்டறியே…..
எங்க கூலிய எப்ப ஒசத்தப்போறே?’ங்கறாங்க தொழிலாளிக…..

இந்த முக்கோணப் பிரச்சனையப் புரிஞ்சுக்கறதுக்குள்ள
நாமெல்லாம் சட்டையப் பிச்சுகிட்டு
சுத்த வேண்டீதுதான்” கலாரசனையத்த கந்தன்.

இப்ப மட்டும் என்ன வாழுது?ன்னேன்.

“ஒரு பக்கம் நடிகருகளுக்குள்ள சண்டை…..

இன்னொரு பக்கம் நடிகருகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சண்டை….

இந்தப் பக்கம் இயக்குநருக்கும் சம்மேளனத்துக்கும் சண்டை….

அந்தப் பக்கம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் சண்டை….

எப்படியோ…. இந்தக் களேபரத்துல ஒருவழியா
சினிமாவையே ஊத்திமூடீட்டா ஊராவது உருப்படும்னு பாத்தா
அது நடக்கற வழியக் காணோம்…..”ன்னு பெருமூச்சு விடறான் கந்தசாமி.

அதெல்லாம் கெடக்கட்டும் கந்தா….!
ஏற்கெனவே இந்த யோக்கியசிகாமணிக
பேங்க்குல வாங்குன கடனையே திருப்பிக் கட்டலையே….
அதுக்கு இந்த பேங்க்காரனுக ஏதாவது
நடவடிக்கை எடுத்தாங்களா?….ன்னு கேட்டதுதான் தாமதம்……

”அட அரை லூசு… வெவரம் புரியாமப் பேசறதே
உனக்கு பொழப்பாப் போச்சு…..
கடன் வாங்குனவுங்க என்ன நம்மள மாதிரியா….?
கரண்ட் பில்லு கட்டுலேன்னாலே
பீஸ் கட்டையப் புடுங்கீட்டுப் போறதுக்கு?

வாங்குனவுங்க இந்த நாட்டோட
“முன்னேத்தத்துக்கே” முதுகெலும்பா இருக்குறவங்க……
“கலைஞருக”…..

உன் பேர்ல வேண்ணா…..
ஏற்கெனவே இந்த அகண்டவானமும்…. ஆறடி பூமியும் இருக்கு…..
ஆனா அவுங்க…..? அடுத்த வேளை சோத்துக்கே
லாட்டரி அடிக்கறவங்க”ன்னு கந்தன் சொல்லச் சொல்ல……

எனக்கு வந்துதே கோபம்…….
கந்தா! இத்தோட நிறுத்திக்கோ….
தின்னு கொழுத்த அவங்களும் நானும் ஒண்ணா?
எங்கிட்ட மிஞ்சுனதே ரெண்டு ஓட்டைச் சட்டிதான் புரிஞ்சுக்கோ…..
வீணா கோபத்தக் கெளப்பாதே…..ன்னேன்.

“அப்படி வா வழிக்கு…..
இதே கோவந்தான்யா மக்களுக்கும் வருது….
‘இவுங்க படங்களால எங்குளுக்கும் பயனில்ல….
இந்த சமூகத்துக்கும் பயனில்ல…..
இதுல எதுக்காக எங்க வரிப்பணத்துல இருந்து
ஒரு கோடிய இந்த அரசாங்கம் இவுங்குளுக்குக்
குடுக்கணும்?ன்னு கேக்கறாங்க.

இருக்குற இரண்டரைக் கோடி கடன்ல
Moopanar-01ஒரு கோடிய மானியமா இந்த அரசாங்கமே
இந்த ”ஏழைகளுக்கு” அள்ளிக்குடுத்திருமாம்….

மீதி இருக்குற ஒண்ணரைக் கோடியையும்
கடனா குடுக்குமாம்…..
”அத வந்து வாங்கீட்டுப் போங்க”ன்னு
இவுங்கள வெத்தலை பாக்கு வெச்சு கூப்புடுது கெவர்மெண்ட்டு….

பத்தாத்துக்கு….. இதுல ஒரு கூட்டம்
மத்திய அரசு மூலமா அந்த ஒண்ணரைக் கோடியையும்
N-S-Krishnanதள்ளுபடி பண்ணீரலாம்ன்னு மூப்பனாரைப் போய்ப் பார்க்க…..
அவுரு பேங்க்குன்னு சொன்னாலே……
”அய்யோ….. ஆள உடு….. கோபாலா…! கிருஷ்ணா….!”ன்னு
கையெடுத்துக் கும்புடுறாராம் கலாரசனையத்தவன்.

வெவரம் புரியாம…..
அது யாருப்பா கோபால கிருஷ்ணன்…?ன்னேன்.

“வாய மூடு…. குறுக்கே பேசாத…..
என்.எஸ்.கிருஷ்ணன்…. எம்.ஆர்.ராதா மாதிரி நடிகருக
சம்பாதிக்கறது மாத்திரமே குறியா இல்லாம,
இந்த சமுதாயத்தை மேம்படுத்தறதுக்காக
பல இடங்கள்ல கல்லடி….. தடியடி…. கத்திக்குத்து…..ன்னு
M.R.RADHAACTING2எல்லாத்தையும் சந்திச்சாங்க…..

சினிமாங்கறது மக்களுக்கு உருப்படியான செய்திகளச் சொல்லும்
ஒரு நல்ல சாதனம்ன்னு நெனச்சாங்க….
அதுக்காக உழைச்சாங்க….

ஆனா இவுங்க…..?
கட்ட வேண்டிய வருமான வரி பாக்கியவே
ஒழுங்காக் கட்டறதில்ல……” அப்படீன்னு போட்டுத் தள்ளுறான்
நம்ம கலாரசனையத்த கபோதி கந்தசாமி.

ஒரு நிமிசம் கந்தா….!
எனக்கொரு சந்தர்ப்பம் குடு…..
நான் ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்….ன்னேன்.

“சரி கேளு”ன்னான்.

அது ஒண்ணுமில்ல…..

அதான்….. வந்து…..

நம்ம கலைஞர்ஜியையும் மூப்பனார்ஜியையும் சேத்து……

ராவ்ஜியையும் ஜெயலலிதாஜியையும் ஒதுக்கி…..
Rajinikanth
தமிழகஜீக்களுக்கு விடிவத் தந்ததா சொல்ற……

ரஜினிஜி இருக்காரே…..

அந்தஜி என்னஜி பண்றாருஜி……ன்னேன்.

“அடச்சீ…..
தமிழ்நாட்டுல இருந்துகிட்டு
இந்த “ஜி” சொல்றத மொதல்ல உடு.

கொஞ்சம் உட்டா இன்னும் அம்பது வருசம்
பின்னால போயி…..
“அக்கிராசனார் அவர்களே !
அபேட்சகர் அவர்களே !ன்னு ஆரம்பிச்சுருவ போலிருக்கு…….

ரஜினி மட்டுமில்ல…..
”நான் மொதல்ல இந்தியன்…….
அப்புறம்தான் தமிழன்”ன்னு
நம்ம பழைய மூப்பனார் கணக்கா பேசறாரே கமலு…..
அவரும் ஒண்ணும் பண்ணல.

மாநிலத்தோட….. நாட்டோட பிரச்சனையவே
தீக்கறவங்கன்னு நம்பப்படற
இவுங்க ரெண்டுபேர் நெனச்சாலே போதும்
இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துரும்.

யார் யாருக்கொ படம் நடிச்சுக் குடுக்குற இவுங்க……
Kamal_Hassanஇவுங்களோட சங்கக் கடனுக்காக
ஒரு படம் நடிச்சுக் குடுத்தாங்கன்னாப் போதும்.

அதச் செய்யாம…..
பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகப் போக வேண்டிய
அரசோட பணத்தை நடிகர் சங்கம் வாங்கறதுக்கு
இவுங்களும் துணைபோறது வெட்கக்கேடு……

பல நடிகருக்கிட்ட இருக்குற கருப்புப் பணத்தை
ரெய்டு பண்ணி வெளிய கொண்டு வந்தாலே போதும்…..
முழுப்பிரச்சனையும் முடிவுக்கு வந்துரும்….”கிறான் கந்தசாமி.

சரி…..கந்தா! எனக்கு நெறைய வேல இருக்கு…..
சுருக்கமா என்னதான் சொல்ல வர்றே……
அதச் சொல்லித்தொலை…..ன்னேன் ஆத்திரம் தாங்காம.

ஆனா….
அதுக்கெல்லாம் நம்ம கலாரசனையத்த கந்தன் அசந்தர்ற ஆளா….?

”இப்பச் சொல்றேன் கேட்டுக்கோ…..”ன்னான்.

சொல்லித்தொலை….ன்னேன் மறுபடியும்.

“இந்த நடிகருகளால சமூகத்துக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல…..
நாடே சாதிச்சண்டை…… மதச் சண்டைல ரத்தம் சிந்திகிட்டு
இருக்குற இந்த வேளைல….. இவுங்க எதைப் பத்தியும்
கவலப்படாம சண்டப் போட்டுகிட்டு
இருக்குறதப் பாக்குறப்போ எரிச்சல் எரிச்சலா வருது.

அதுனால…..
நம்ம அரசு எக்காரணம் கொண்டும் அரசுப்பணத்துல இருந்து
சல்லிக்காசுகூட மானியமா மட்டுமில்ல…..
கடனாக்கூட குடுக்கக் கூடாது…..”

மேல சொல்லு……..

“சாதாரண சனங்க போனா
அல்லாடவைக்கிற இந்த பேங்க்காரனுக…..
இந்தக் கடன வட்டியோட மட்டுமில்ல…..
அதுக்கு மேலயும் ஒரு கோடியோ ரெண்டு கோடியோ
அபராதமாப் போட்டு வசூல் பண்ணனும்….”

அப்பவும் வசூலாகலேன்னா…..?

“மாட்டு லோன் கட்டாதவன் மாட்டை
திருப்பிப் புடிச்சுகிட்டுப் போற மாதிரி….
நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கணும்…..
அப்பவும் கட்டலேன்னா…..?

அத முழுசா இடிச்சுட்டு….
தியாகராயர் நகர் மக்களோட………..

ஆத்தர அவசரத்துக்கு ஒதவுற மாதிரி……

அந்த எடத்துல…….

இலவசக் கழிப்பிடம் ஒண்ணு கட்டலாம்.

அதுதான் சரி.

அவசரத்துடன்,
பாமரன்.
(நன்றி : குமுதம் ஸ்பெஷல் 1997)

One thought on ““பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….(கிளைமேக்ஸ்..)

Leave a comment