கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்….?

”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான்?” என்கிற எம்.ஜி.ஆரின் படகோட்டி பாடல்
vijaykanthவரிகள் பண்பலையில் ஓடிக்கொண்டிருக்க இருக்க எனக்கு ஏனோ கருப்பு எம்.ஜி.ஆரின் ஞாபகம்
வந்துவிட்டது.
.
சமீபத்தில்தான் கோவையிலுள்ள ஒரு யோகா மையத்திற்கு வந்து போனார் கேப்டன்.
.
ஒரு வார யோகா அவரது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது என்று ஆணித்தரமாக அறிவித்து விட்டுத்தான் விமானம் ஏறினார் விஜயகாந்த்.
.
போய் இறங்கிய கையோடு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரண உதவியும் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு சிவக்கொழுந்து ரூபத்தில் வந்திருக்கிறது சிக்கல்.
.
முண்டியடித்த மக்களை ஒழுங்குபடுத்தவில்லை என எம்.எல்.ஏ சிவக்கொழுந்து வேனிலேயே ”ஒழுங்குநடவடிக்கை”க்கு உள்ளானதையும்….
.
இலவச இணைப்பாய் வேன் டிரைவருக்கும் ஓரிரண்டு கிடைத்ததையும்
.
கண்டு களித்தது தமிழ்ச் சமூகம்.
.
அப்புறம் ”வாங்கியவரே” ”அடிக்கலை…… ஆனா அப்புடி அடிச்சாலும் நல்வழிப்படுத்தத்தான் அடிப்பாரு….” என அறிக்கைவிட்டுத் தெறிக்கவிட….
புல்லரித்துவிட்டது.
.
.
ஆனால் நமக்குள்ள கேள்வியெல்லாம் வேறு.
அடித்தார்…. அடிக்கவில்லை….
உரிமை இருக்கு…. உரிமை இல்லை….
என்பதையெல்லாம் தாண்டி ஏன் யாரும் வேறொரு விஷயத்தை இதனோடு தொடர்புபடுத்தியே பார்க்க மாட்டேனென்கிறார்கள் என்பதுதான்.
.
அதுதான் : ஒரு வாரம் யோகா பயிற்சி எடுத்து மனதையும் உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கிற ஒருவர் எப்படி எண்ணி நாற்பத்தி எட்டே
மணிநேரத்தில் பக்கத்தில் இருப்பவருக்கு இப்படி கும்மாங்குத்து விட முடியும்? என்பதுதான் நம் கேள்வியே.
.
யோகா பயிற்சி கொடுத்த புண்ணியவான்கள் மனதையும் கட்டுப்படுத்த பயிற்சி கொடுத்திருப்பார்கள்தானே?
.
அப்பயிற்சி ஏன் இங்கே பலனளிக்காமல் புட்டுகிச்சு?
.
பிரச்சனை பயிற்சி கொடுத்தவரின் போதாமையா? அல்லது எடுத்தவரின் இயலாமையா?
.
அதுவுமல்லது அந்த யோகா பயிற்சிக்கான சக்தி….
Expiry Date and Time….
எல்லாம் வெறும் நாற்பத்தி எட்டு மணி நேரம் மட்டும்தானா?
.
இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள்.
.
ஆனால் எல்லாவற்றைவிடவும் பெருத்த சந்தேகம் ஒன்று உண்டு…..
.
பயிற்சி முடிந்து சிவக்கொழுந்துவுக்குக் கிடைத்த மாதிரி….
.
பயிற்சியின்போதே ஆசிரமக்காரர்களுக்கும் ”ஏதாவது” கிடைத்ததா என்பதே அது.
.
ஏன்னா….. அடிச்ச அடியப் பாத்து பொறிகலங்கிப்போய்….
”ஒருத்தருக்கா கொடுத்தான்….MGR1
இல்லை ”அவருக்குமா” கொடுத்தான்….?”ன்னு அந்தப் பாட்டே எனக்கு இப்ப….தாறுமாறாத்தான் கேக்குது……
.
.
(தெருவோரக் குறிப்புகள் – தின செய்தி நாளிதழ்)

One thought on “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்….?

Leave a comment